Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்கள் அரசு பள்ளியில் பசுமை தீபாவளி கொண்டாட்டம்

நவம்பர் 11, 2023 11:35

பள்ளிபாளையம்:நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது.

நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி  தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பள்ளிபாளையம் நகரமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் பசுமை தீபாவளியை கொண்டாடும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

மாணவர்களுக்கு பசுமை தீபாவளி! புகையில்லா தீபாவளி! தூய்மை தீபாவளி இவற்றின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்